அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர்
இந்தியா

திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றாரா கெஜ்ரிவால்?

PT WEB

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21-ஆம் தேதி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஒருவாரம் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அது முடிவடைந்த நிலையில், கெஜ்ரிவால் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்

நீதிமன்ற காவல் வழங்கப்பட்டால், திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், முன்னாள் அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் மணி சிசோடியா ஆகியோர் திகார் சிறையில் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காவலில் இருந்தபடி முதலமைச்சர் பணியை தொடரும் அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டால் பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.