அஸாம் மாநிலத்தில் தொடரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் தவணை செலுத்த 6 மாத அவகாசம் வழங்க வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அஸாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்புகளால் இறந்தோர் எண்ணிக்கை 82ஐ தொட்டுள்ளது. மழை நீடிக்கும் நிலையில் சுமார் 2 லட்சம் பேர் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போர் கடன் தவணையை திரும்பச்செலுத்த 6 மாத அவகாசம் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி, அஸாம் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக 11 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.