பாட்டில் தண்ணீர் pt
ஹெல்த்

பாட்டில் தண்ணீர் குடிப்பவர்களா நீங்கள்? வெளியான அதிர்ச்சி தகவல்!

பாட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீர் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என தெரிவித்துள்ளது.

PT WEB

பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் அதிக ஆபத்தான உணவு பட்டியலில் உள்ளது என்பதை இந்திய உணவு தர ஆணையம் உறுதி செய்துள்ளது.

பாட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீர் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் உரிமம் பெற்ற நிறுவனங்கள் தர ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் இதுபோன்ற ஆய்வுகளை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் அதிக ஆபத்தான உணவு பட்டியலில் உள்ளது என தெரிவித்திருந்தது.