ஆசிரியர் போக்சோவில் கைது pt desk
குற்றம்

தென்காசி | பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

PT WEB

செய்தியாளர்: டேவிட்

தென்காசி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியர் டேவிட் மைக்கேல் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவர் பள்ளியில் பயிலும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்த மாணவிகள் பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளனர்.

கைது

இதையடுத்து ஆசிரியர் டேவிட் மைக்கேல், மருத்துவ விடுப்பில் சென்று தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் டேவிட் மைக்கேல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார், ஆசிரியர் டேவிட் மைக்கேலை தேடி வந்தனர்.

இந்நிலையில் கன்னியாகுமரியில் பதுங்கி இருந்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.