குற்றம்

பரமக்குடி: 13 அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் கைது

பரமக்குடி: 13 அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் கைது

நிவேதா ஜெகராஜா

ராமநாதபுரம் பரமக்குடி அருகே அரசுப் பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியரான ராமராஜ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட்டை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மாணவிகளை தகாத முறையில் தொட்டதாகவும் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.