பெண்ணுக்கு பாலியல் தொல்லை – அதிமுக நிர்வாகி கைது pt desk
குற்றம்

காஞ்சிபுரம் | வீட்டில் குடியிருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – அதிமுக நிர்வாகி கைது

படப்பையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

செய்தியாளர்: கோகுல்

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே படப்பை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம் (60). இவர், குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் அணி இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது வீட்டில், சுங்குவார்சத்திரம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்யும் 24 வயதுடைய 2 இளம் பெண்கள் குடியிருந்து வந்துள்ளனர்.

Police station

இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு, பொன்னம்பலம் ஒரு இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அச்சமடைந்த இரண்டு பெண்களும், இவரது வாடகை வீட்டிலிருந்து , வெளியேறி கீழ்படப்பை பகுதியில் மற்றொரு வாடகை வீட்டில் குடியேறி உள்ளனர். இதனிடையே, இளம் பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட, பொன்னம்பலம், குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இரண்டு பெண்களும், அவரது சக நண்பர்களும் பொன்னம்பலத்தை தொடப்பக்கட்டையால் சரமாரியாக தாக்கி மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார், பொன்னம்பலத்தை கைது செய்து, அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், பெண்களிடம் ஆபாசமாக பேசுதல், பெண்களை தாக்கியது உள்பட மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பவுள்ளனர்.

இதனிடையே, பொன்னம்பலத்தை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.