திருடர்கள் கைது
திருடர்கள் கைது புதியதலைமுறை
குற்றம்

அடை மழையில் நடந்த திருட்டு.. மங்கி குள்ளா திருடர்களை இரண்டே நாட்களில் தட்டித்தூக்கிய போலீஸ்!

யுவபுருஷ்

அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த காப்பர் கேபிள்கள் கடந்த 26ஆம் தேதி திருடப்பட்டது. மங்கி குள்ளா அணிந்து அடை மழையிலும் விடாமல் திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளும் நேற்று வெளியான நிலையில், விவகாரம் தொடர்பாக, ஜெயங்கொண்டம் தனி படைபோலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது திருட்டில் ஈடுபட்டவர்கள், திருச்சியைச் சேர்ந்த ஐயப்பன், தினேஷ் குமார், வசந்தன், கோபி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், திருட்டுக்கு அவர்கள் பயன்படுத்திய ஜீப்பையும் பறிமுதல் செய்தனர்.

திருடப்பட்ட ஒன்றரை லட்சம் மதிப்பிலான காப்பர் கேபிள் ஒயர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.