கொரோனா வைரஸ்

இந்தியாவில் புதிதாக 44,658 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

JustinDurai
இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் சமீப நாட்களாக குறைந்து வந்தது. எனினும், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த்தொற்றால் புதிதாக 44,658 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 30,007 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்த பாதிப்பு 3,26,03,188 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 3,18,21,428 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தி்ல் 32,988 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,44,899 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 496 பேர் நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,36,861 என்றளவில் உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.