The Voice of Hind Rajab movie  Web
சினிமா

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படத்தை தடை செய்த இந்தியா! என்ன காரணம்?

இஸ்ரேலுடனான உறவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் காரணம் காட்டி, 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' படத்துக்கு இந்தியா தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது .

PT WEB

ஆஸ்கர் பரிந்துரைக்கப்பட்ட 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' திரைப்படம், 2024 காசா போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீன சிறுமியைப் பற்றியது. இந்திய CBFC, இதை தடை செய்தது. பல திரைப்பட விழாக்களில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் மட்டுமே திரையிடப்பட்டது. CBFC சான்றிதழ் இல்லாததால், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அனுமதி தேவை.

2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காசா போரில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட 5 வயது சிறுமியைப் பற்றிய, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப் (The Voice of Hind Rajab)' திரைப்படத்தை, மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC) வாய்மொழியாக நிராகரித்துள்ளதாக அப்படத்தின் இந்திய விநியோகஸ்தரான மனோஜ் நந்த்வானா தெரிவித்தார். இப்படத்திற்கான திரையரங்குத் தடை குறித்த செய்தியை, ஹாலிவுட் வர்த்தகப் பத்திரிகையான 'வெரைட்டி' வியாழக்கிழமை (மார்ச் 19, 2026) அன்று முதன்முதலில் வெளியிட்டது.

The Voice of Hind Rajab movie team

துனிசியாவில் தயாரிக்கப்பட்ட அந்தத் திரைப்படம் 2024-ஆம் ஆண்டு காசா போரின்போது இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட 5 வயது சிறுமியைப் பற்றிய கதை .

CBFC சான்றிதழ் இல்லாத திரைப்படங்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அனுமதி தேவைப்படும் . பல திரைப்பட விழாக்களில் திரையிட, கடந்த ஓராண்டாக இந்தப் படத்திற்கு அனுமதி கேட்டும் அனுமதி மறுக்கப்பட்டது. குறிப்பாக பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா மற்றும் கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழா உட்பட பல விழாக்களில் அத்திரைப்படம் திரையிட மறுக்கப்பட்டது. இந்தியாவில் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் மட்டுமே இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது என்று நந்த்வானா தி ஹிந்து (The Hindu ) கூறியுள்ளார்

The Voice of Hind Rajab movie team at the 82nd Venice Film Festival, Venice, Italy

படத்திற்கு எதிராக சட்டரீதியான சவாலைத் தொடரப் போவதில்லை என்றும், தணிக்கை வாரியத்திடமிருந்து தனக்கு எழுத்துப்பூர்வமாக நிராகரிப்பு கடிதம் கிடைக்கவில்லை என்றும் அவர் தி ஹிந்துவிடம் கூறியுள்ளார். நாங்கள் ‘லேண்ட் ஜிஹாத்’ என்ற ஒரு திரைப்படத்தைச் சமர்ப்பித்தோம். ஆனால், இது மதக்கலவரப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று தணிக்கை வாரியம் நிராகரித்தது என்று நந்த்வானா கூறியுள்ளார் .

தி இந்து எழுப்பிய கேள்விக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமும், மத்திய நிதி ஆணையமும் (CBFC) பதிலளிக்கவில்லை. கடந்த சில நாட்களாக இந்தப் படம் மத்திய நிதி ஆணையத்தின் மறுஆய்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், தற்போது அவர்களால் அது மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் ஒரு மூத்த அதிகாரி வெள்ளிக்கிழமை தி இந்துவிடம் தெரிவித்தார்.