`அவன் இவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜனனி. இவர் தொடர்ந்து தெகிடி, அதே கண்கள், பலூன், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாது 3 Dots, 7th Day, Mosayile Kuthira Meenukal, Koothara என சில மலையாளப்படங்களிலும் நடித்துள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வருபவர் சாய் ரோஷன். இவருக்கும் ஜனனிக்கும் காதல் மலர, ஜனனி மற்றும் அவரது காதலரான சாய் ரோஷன் ஷாம் இருவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று சாய் ரோஷன் ஷாம் - ஜனனி இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துக் கொண்டனர்.