நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஜனவரி 22 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா -BEYOND THE FAIRYTALE என்ற ஆவணப்படத்தில் “நானும் ரவுடி தான்” திரைப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகளை அனுமதி இன்றி பயன்படுத்தியாக வழக்கு தொடரப்பட்டது. 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட இவ்வழக்கில் நெட்பிலிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.