தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
கோவையில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூபாய் 81 ஆயிரம் மற்றும் வாக்காளர்கள் விவரம் அடங்கிய பூத் சிலிப் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் 67 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதால் உரியவர்களிடம் நகைகள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.
ஓசூர் அருகே கூரியர் சர்வீஸ் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.