ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக நாளையும் மழை தொடரும் என்பதால் அண்ணாமலை பல்கலை மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் மரக்காணம் அருகே கரையை கடக்கத்தொடங்கியிருக்கும் நிலையில், இனி சென்னை மற்றும் புதுச்சேரியில் நிலவரம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.