திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் குடும்பத்திற்கு மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு கிளீன் சீட் வழங்கியுள்ளது.
கர்நாடகாவில் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட மூன்று பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இசைக்கலைஞர் ஒருவர், தன்னுடைய ஷூக்கள் அழுக்காகி விடக்கூடாது என்பதற்காக, தனது பாதுகாவலர்களைக் கொண்டு மேடைவரை தன்னை தூக்கிச்செல்ல வைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.