திரிபுராவில் இருந்து மேற்கு வங்காளத்தில் கொண்டு வரப்பட்ட சிங்கங்களுக்கு, புதிய பெயர்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் (CZA) மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் சிலிகுரி சபாரி உயிரியல் பூங்காவிற்குக் கொண்டுவரப்பட்ட சிங்கங்களுக்கு பெயர்களை மாற்ற வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீதா என்ற சிங்கமும், அக்பர் என்ற சிங்கமும் ஒரே இடத்தில் அடைத்து வைத்துள்ள செயல், இந்து மத உணர்வை அவமதிப்பது என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.