அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் மற்றும் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தவெக அலுவலகம் சென்றுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, இருக்கும் கூட்டணி கூட பிரியலாம் என கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.