பலுசிஸ்தானுக்கு தனி நாடு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையுடன், பல தசாப்தங்களாக பல்வேறு பிரிவினைவாத ஆயுதக் குழுக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.
பலூச் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பாகிஸ்தானியப் பாதுகாப்புப் படைகள் பலவீனமாக இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் காஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் 2 நாட்களுக்குள் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழக்க காரணமாகியிருக்கிறது பலூசிஸ்தான் விடுதலை ராணுவம். பாகிஸ்தானில் தனி நாடு கேட்டு போராடி வரும் இவர்கள் யார்?