இதற்கு முன்பெல்லாம் சாதிய படங்கள் வந்ததே இல்லை, சமத்துவத்தைப் பேசும் படங்கள்தான் வந்திருக்கின்றன எனச் சொல்லும் இயக்குநர்கள் எடுத்த படங்களின் பெயரைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
இந்தப் படம் வெறுப்பைப் பேசவில்லை, வன்முறையைப் போதிக்கவில்லை, பிரசாரப் படமும் இல்லை. ஒரு சித்தாந்தத்தைத் தூக்கிப்பிடித்து பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படமுமில்லை.
இந்தப் படத்தை தமிழ் ரசிகர்கள் பார்த்த விதம் மிக சிறப்பானது. நான் எப்போதுமே சொல்வது போல தமிழ் சினிமா மெய்ன்ஸ்ட்ரீம் பார்வையாளர்கள் தான், the most evolved என சொல்வேன்.
நான் `ஆடுகளம்' படத்தை 15 வருடங்களாக பார்க்கவே இல்லை. ஒரு படம் எடுக்கும் வரை தான் அது நம் கையில் இருக்கும், எடுத்த பிறகு அதைக் கடந்து வந்துவிட வேண்டும்.