இந்தப் படத்தை தமிழ் ரசிகர்கள் பார்த்த விதம் மிக சிறப்பானது. நான் எப்போதுமே சொல்வது போல தமிழ் சினிமா மெய்ன்ஸ்ட்ரீம் பார்வையாளர்கள் தான், the most evolved என சொல்வேன்.
நான் `ஆடுகளம்' படத்தை 15 வருடங்களாக பார்க்கவே இல்லை. ஒரு படம் எடுக்கும் வரை தான் அது நம் கையில் இருக்கும், எடுத்த பிறகு அதைக் கடந்து வந்துவிட வேண்டும்.
நான் சிறை பார்த்த போது படத்தில் என்ன குறைகள் இருக்கிறது என்றே பார்த்தேன். இன்றும் நிறைய பேர் பாராட்டும் போது தான், ஐயோ நாம் படத்தை சரியாக பார்க்கவில்லையோ, குறையை மட்டுமே தேடினோமோ என தோன்றியது.