பழுதான படகு எஞ்சின் - கடலில் குதித்த மீனவர் உயிரிழப்பு

பழுதான படகு எஞ்சின் - கடலில் குதித்த மீனவர் உயிரிழப்பு
பழுதான படகு எஞ்சின் - கடலில் குதித்த மீனவர் உயிரிழப்பு

பழவேற்காடு கடலில் மீன் பிடிக்க சென்று படகு எஞ்சின் பழுதானதில் கடலில் குதித்த 2 மீனவர்களில் ஒருவர் ஸ்ரீஹரிகோட்டா அருகே சடலமாக மீட்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு செம்பாசிப்பள்ளி மீனவ கிராமத்தை சேர்ந்த அன்பரசன்(21) மற்றும் தேனப்பன்(23) ஆகியோர் நடுக்கடலில் பைபர் படகில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, படகின் எஞ்சின் பழுதானதால், இருவரும் கடலில் குதித்துள்ளனர்.இந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டா வனப்பகுதி அருகே காயங்களுடன் இருந்த தேனப்பனை சக மீனவர்கள் உயருடன் மீட்டனர்.

ஆனால், மீனவர் அன்பரசனை தேடிய போது ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் அருகே கடற்கரையில் சடலமாக மீட்டனர்.உடற்கூறு ஆய்வுக்காக பின்னர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த திருப்பாலைவனம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com