கொரோனாவால் அன்பை அழிக்க முடியாது: கலங்கவைத்த தாத்தா-பேத்தி போட்டோ!

கொரோனாவால் அன்பை அழிக்க முடியாது: கலங்கவைத்த தாத்தா-பேத்தி போட்டோ!

கொரோனாவால் அன்பை அழிக்க முடியாது: கலங்கவைத்த தாத்தா-பேத்தி போட்டோ!
Published on

பிரபஞ்சம் தற்போது அதிகமாக உச்சரிக்கும் வார்த்தை கொரோனா. கண்ணுக்கே தெரியாமல், அனைவரது கண்களிலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது இந்த கொரோனா. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியை வெகுவாக உலுக்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் அந்நாட்டில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று நோய் என்பதால் கொரோனா பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,08,746 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,938 ஆக உள்ளது. கொரானாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமான நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்த கொரோனாவால் மனதை உருக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. கேரளாவில் தந்தையின் இறுதிச்சடங்கை வீடியோ கால் மூலமாக மகன் பார்த்த சம்பவம்போல் உலகெங்கும் சோக சம்பவங்கள் அரங்கேறின. அருகில் இருந்தாலும் நேரில் பார்த்து தொட்டு பேச முடியாத நிலையை கொரோனா உருவாக்கிவிட்டது.

அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயதான முதியவர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரை நேரில் சந்திக்க முடியாத அவரது பேத்தி தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என  நிச்சயதார்த்த மோதிரத்தை  கண்ணாடி ஜன்னல் வழியாக சொல்கிறார். இந்த புகைப்படம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள அந்த இளம்பெண், ''எனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதை என் தாத்தாவிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் இடத்தில் போன் வசதியும் இல்லை. அதனால் ஜன்னல் வழியாக பார்த்து சொன்னேன்'' என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ''கொரோனா வைரசால் தாத்தா, பேத்திக்கு இடையேயான அன்பை அழிக்க முடியாது'' என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com