இந்தியா தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் சுஞ்சுவான் பகுதியில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர்கள் 6 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னனியில் பாகிஸ்தான் இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் குற்றம்சாட்டியிருந்தார். அதற்கான விலையை பாகிஸ்தான் கொடுக்கும் என்றும் கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குர்ராம் டஸ்ட்கிர் கான், இந்தியா தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தங்கள் நாட்டை பாதுகாக்க எப்போதும் தயாராகவே இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்களிடையேயான வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.