”நாங்கள் பக்கத்தில் உள்ள சின்ன நாடுகளை கொடுமைப்படுத்த மாட்டோம்” - சீன அதிபர் ஜி ஜின்பிங்!

”நாங்கள் பக்கத்தில் உள்ள சின்ன நாடுகளை கொடுமைப்படுத்த மாட்டோம்” - சீன அதிபர் ஜி ஜின்பிங்!
”நாங்கள் பக்கத்தில் உள்ள சின்ன நாடுகளை கொடுமைப்படுத்த மாட்டோம்” - சீன அதிபர் ஜி ஜின்பிங்!

சீன நாட்டின் அதிபர் ஜீ ஜின்பிங், பத்து நாடுகள் பங்கேற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்க மாநாட்டில் முக்கியமான ஒன்றை அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு தெளிவாக விளக்கியுள்ளார். அதாவது சீனா தனக்கு பக்கத்தில் உள்ள சின்ன நாடுகளை கொடுமைப்படுத்தாது என தெரிவித்துள்ளார் அவர். 

“நாங்கள் யாரிடமும் மேலாதிக்கம் செலுத்த விரும்பவில்லை. சீனா தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தை சார்ந்த நாடுகளுக்கு நல்ல நண்பனாகவும், நல்ல அண்டை நாடாகவும், நல்ல கூட்டாளியாகவும் இதுவரை இருந்துள்ளது, இருந்து வருகிறது, இனி வரும் நாட்களிலும் அப்படியே இருக்கும்” எனவும் அவர் சொல்லி உள்ளதாக சீனா அரசின் ஊடகம் தெரிவித்துள்ளது. 

தென் சீனக் கடல் பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இதனை தெரிவித்துள்ளார் அதிபர் ஜீ ஜின்பிங். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com