வியட்நாமை அடுத்தடுத்து தாக்கும் புயல்கள்: அச்சத்தில் மக்கள்

வியட்நாமை அடுத்தடுத்து தாக்கும் புயல்கள்: அச்சத்தில் மக்கள்

வியட்நாமை அடுத்தடுத்து தாக்கும் புயல்கள்: அச்சத்தில் மக்கள்
Published on

வியட்நாம் நாட்டை அடுத்தடுத்து புயல்கள் தாக்குவதால் மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

வியட்நாமில் கடந்த வாரம் பெய்த கனமழையால் வெள்ளம் ‌ஏற்பட்டு 72 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது கானூன் புயல் அந்நாட்டை அச்சுறுத்தி வரு‌கிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்ப‌ட்டு வருகின்றன. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ‌வாரம் புரட்டி போட்ட கனமழையால் மத்திய மற்றும்‌ வடக்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கான வீடு‌கள் வெள்ளத்தில் மூழ்கின. பல்லாயிரக்கணக்கா‌ன ஏக்க‌ரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களும் நீரில் மூழ்கி ‌நாசமடைந்தன. 72 பேர் உயிரிழந்தனர். இந்த பாதிப்பில் இருந்து மீளாத நிலையில் தற்போது கானுன் புயல் நெருங்கி வருவதால், அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளன‌ர்.

வெள்ள பாதிப்பு குறித்து வியட்நாம் தொலைக்காட்சி ஒன்று விவரிக்கும்போது, ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, 200 வீடுகள் வெள்ளத்தால் முழுவதும் தரைமட்டமாகியுள்ளன. பல நகரங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன. 22,000 ஹெக்டேர் நெல் பயிரிடப்பட்ட விளை நிலங்கள் வெள்ளத்தால் நாசமாகியுள்ளன என்று விவரித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com