கொரோனா குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தவர் சுட்டுக் கொலை

கொரோனா குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தவர் சுட்டுக் கொலை

கொரோனா குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தவர் சுட்டுக் கொலை
Published on
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பகுதியில் பிங் லியூ என்ற 37 வயது ஆராய்ச்சியாளர் கொரோனா வைரஸ் குறித்த தீவிர ஆய்வில் ஈடுபட்டிருந்தார். வைரஸ் பற்றிய பல முக்கியமான விஷயங்களைக் கண்டுபிடிக்கும் இறுதிக்கட்டத்தில் அவரது ஆராய்ச்சிகள் இருந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 
 
 
பீட்ஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கரில்ஹவோ என்ற நபரின் உடல் கிடைத்துள்ளது. ஆய்வாளர் பிங்லியூவை சுட்டுக் கொலை செய்துவிட்டு கரில்ஹவோ தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com