அமெரிக்கா:கடந்த வாரத்தில் ஒவ்வொரு 33 விநாடிக்கும் ஒருவர் கொரேனாவால் மரணம்; அதிர்ச்சி தகவல்

அமெரிக்கா:கடந்த வாரத்தில் ஒவ்வொரு 33 விநாடிக்கும் ஒருவர் கொரேனாவால் மரணம்; அதிர்ச்சி தகவல்

அமெரிக்கா:கடந்த வாரத்தில் ஒவ்வொரு 33 விநாடிக்கும் ஒருவர் கொரேனாவால் மரணம்; அதிர்ச்சி தகவல்

ஆண்டு இறுதி விடுமுறை நாட்கள், பண்டிகைகள் மற்றும் நன்றி அறிவிக்கும் கூட்டங்களால் கடந்த வாரத்தில் அமெரிக்காவில், ஒவ்வொரு 33 வினாடிக்கும் ஒருவர் கொரோனாவுக்கு இறக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

“கடந்த ஒரு வாரத்தில் மட்டும்  அமெரிக்காவில், ஒவ்வொரு 33 வினாடிக்கும் ஒருவர் கொரோனாவுக்கு இறக்கிறார்கள். டிசம்பர் 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த ஏழு நாட்களில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு 18,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், இது முந்தைய வாரத்தை விட 6.7% அதிகரித்துள்ளது”என்று மாநில பகுப்பாய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

ஆண்டு இறுதி விடுமுறை நாட்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்திருந்தபோதிலும், அமெரிக்க விமான நிலையங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3.2 மில்லியன் மக்கள் பயணம் செய்துள்ளனர். நன்றி அறிவிப்பு, விடுமுறை கூட்டங்களால் தொற்றுநோய் அதிகரித்தால் மருத்துவமனைகள் நிரம்பிவழியும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலைப்படுகிறார்கள்.

கடந்த வாரம் புதிய கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை 1% குறைந்து கிட்டத்தட்ட 1.5 மில்லியனாக இருந்தது. ஆய்வின்படி, டென்னசி, கலிபோர்னியா மற்றும் ரோட் தீவு ஆகியவை  அதிக தனிநபர் புதிய பாதிப்புகளை கொண்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com