அமெரிக்காவில் தொடங்கிய கொரோனா எதிர்ப்பு சக்தியை கண்டறியும் முறை

அமெரிக்காவில் தொடங்கிய கொரோனா எதிர்ப்பு சக்தியை கண்டறியும் முறை
அமெரிக்காவில் தொடங்கிய கொரோனா எதிர்ப்பு சக்தியை கண்டறியும் முறை

அமெரிக்காவில் ரத்தப் பரிசோதனை மூலம் உடலில் கொரோனா எதிர்ப்புச் சக்தி உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது.

கொரோனாவை எதிர்க்கும் சக்தி உடலில் உள்ளதா இல்லையா என்பதை அறியும் வசதி அமெரிக்காவில் கிடைக்கத் தொடங்கியுள்ளது. தற்போது கொரோனாவை கண்டறிய மூக்கு, தொண்டை, நுரையீரல் எனச் சுவாசப் பாதைகளில் ஒட்டியுள்ள துகள்களை எடுத்துச் சோதிக்கப்பட்டு வருகிறது. இது சற்று கடினமான நடைமுறை என்பதுடன் முடிவு தெரிய அதிக நேரம் பிடிக்கிறது.

ஆனால் அமெரிக்காவில் விரலிலிருந்து சில சொட்டு ரத்தம் எடுத்து கொரோனா எதிர்ப்பு உயிரிகள் உருவாகியுள்ளனவா எனக் கண்டறியும் யுக்தி பின்பற்றப்படுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு அதற்கான மெலிதான அறிகுறிகள் அல்லது அறிகுறிகளே இல்லாதவர்களிடம் இம்முறையில் சோதிக்க முடியும். எந்த ஒரு நோய்த் தொற்று மனித உடலில் ஏற்பட்டாலும் அதை எதிர்க்க ஆன்ட்டி பாடி என்ற எதிர் உயிரிகள் உருவாகும். கொரோனா தாக்கும் போதும் இவை உருவாகும். கொரோனா அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகளைச் சோதித்து அதில் குறிப்பிட்ட எதிர் உயிரிகள் இருந்தால் கொரோனா தாக்கியுள்ளதை உறுதி செய்து எதிர்ப்புத்திறனை அறிய முடியும் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.

எளிமையாகவும் விரைவானதாகவும் இருப்பதால் இந்த முறையில் கொரோனாவை சோதிக்கப் பல ஆய்வகங்கள் முயல்கின்றன. இவ்வகையில் ரத்தப் பரிசோதனை செய்யும் உபகரண தொகுப்பு விலை பத்து டாலர்களுக்குக் கீழேதான். அதாவது 750 ரூபாய்க்கும் குறைவு எனக் கூறுகிறது கலிஃபோர்னியாவின் பயோமெரிக்கா ஆய்வகம். இந்த முறை எளிமை, விரைவு, மலிவு என 3 சாதகமான அம்சங்களைக் கொண்டிருப்பதால் இவ்வகை ரத்தப் பரிசோதனை உபகரணங்களை வாங்க வெளிநாடுகளிலிருந்தும் போட்டிப் போடுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com