“காஷ்மீர் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” - அமெரிக்கா 

 “காஷ்மீர் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” - அமெரிக்கா 

 “காஷ்மீர் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” - அமெரிக்கா 
Published on

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போதைய சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அண்மையில் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்து, நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால், இதற்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தது. அத்துடன், பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு, அம்மாநிலத்தையும் இந்தியாவின் அங்கம் தான் உறுதிபட தெரிவித்திருக்கிறது. 

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இது சட்ட விரோதமான நடவடிக்கை என்றும், இதற்குப் பதிலடி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில், காஷ்மீர் விவகாரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளருக்க பேட்டியளித்துள்ள அமெரிக்க செய்தி தொடர்பாளர் மார்கன் ஆர்டகஸ், பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல், தற்போதைய சூழலில் அமைதி காக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும், ஜம்மு- காஷ்மீர் விவகாரம் முற்றிலும் உள்நாட்டு சம்பந்தப்பட்டது என இந்தியா தெரிவித்திருப்பதை அமெரிக்கா கவனத்தில் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com