மொசூல் நகரில் உள்ள பெரிய மசூதியை அமெரிக்க வான்படையினர் குண்டு வீசித் தகர்த்துவிட்டதாக ஐ.எஸ். இயக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். அதேசமயம், ஐ.எஸ். பயங்கரவாதிகள்தான் வெடிகுண்டுகளால் மசூதியை தகர்த்துவிட்டதாக, ஈராக் ராணுவம் கூறுகிறது. இந்நிலையில் உண்மையிலேயே யார் அந்த மசூதியை தகர்த்தது என்ற குழப்பம் நிலவுகிறது.
ஈராக்கின் மொசூல் நகரத்தில் உள்ள பெரிய மசூதியை ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளால் தகர்த்துவிட்டதாக அந்நாட்டு ராணுவம் கூறியிருக்கிறது. மிகப் பழமையான வடிவமைப்புக்காகப் பெயர்பெற்ற இந்த மசூதி, ஐ.எஸ். இயக்கத்தின் தலைமையிடமாகத் திகழ்ந்து வந்தது. அமெரிக்க வான்படை உதவியுடன், ஈராக் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த மசூதி தகர்க்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கக் குண்டு வீச்சில் மசூதி இடிந்து விழுந்ததாக ஐ.எஸ். அமைப்பு குற்றம்சாட்டியிருக்கிறது.