இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''குறிப்பிட்ட ஒரு நபர் ஒரே நாளில் பல தடுப்பூசி மையங்களுக்குச் சென்று நிறைய தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளார். இதற்கு அவர் வெவ்வேறு நபர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி இருக்கிறார். தடுப்பூசி போட யாருடைய பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, உண்மையில் அவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. அவர்களது பெயரில், இந்த நபர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்'' என அதிகாரிகள் கூறுகின்றனர்.