ukraine says it hit russias bridge to crimea with underwater explosives
கிரி்மியா பாலம்ராய்ட்டர்ஸ்

கிரிமியா பாலத்தைத் தாக்கிய உக்ரைன்! ரஷ்யாவிற்கு மீண்டும் அதிர்ச்சி!

கிரிமியாவிற்குச் செல்லும் ரஷ்யாவின் பாலத்தை நீருக்கடியில் வெடிபொருட்களால் தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
Published on

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் ரஷ்யாவின் ராணுவ விமானத் தளங்கள் மீது உக்ரைன் முதன்முறையாக உக்கிரமான தாக்குதலை நடத்தியது. உக்ரைன் ராணுவம், ஸ்பைடர்வெப் எனக் குறிப்பிடப்பட்ட ஒரு ரகசிய நடவடிக்கையின் கீழ், ரஷ்யாவின் உள் பகுதிகளில் உள்ள இர்குட்ஸ்க், முர்மான்ஸ்க், இவானோவோ, ரயசான் மற்றும் அமூர் ஆகிய ஐந்து ராணுவ விமானத் தளங்களை இலக்காகக் கொண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை பெற்ற ரஷ்யாவின் TU-95, TU-22M, A-50 போன்ற முக்கிய ராணுவ விமானங்கள் உள்பட 41 விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கிரிமியாவிற்குச் செல்லும் ரஷ்யாவின் பாலத்தை நீருக்கடியில் வெடிபொருட்களால் தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து் உக்ரைனின் SBU பாதுகாப்பு சேவை, ‘ரஷ்யாவையும் கிரிமியன் தீபகற்பத்தையும் நீர்மட்டத்திற்குக் கீழே இணைக்கும் சாலை மற்றும் ரயில் பாலத்தில் வெடிபொருட்கள் வைத்து தாக்கப்பட்டது. இன்று அதிகாலையில் அதை வெடிக்கச் செய்வதற்காக 1,100 கிலோகிராம் (2,420 பவுண்டுகள்) வெடிபொருட்களைப் பயன்படுத்தப்பட்டது. இதனால், பாலத்தின் நீருக்கடியில் உள்ள தூண்கள் சேதமடைந்தன. முன்பு 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை கிரிமியன் பாலத்தைத் தாக்கியிருந்தோம். இன்று இந்தப் பாலத்தை நீருக்கடியில் தாக்கினோம். இந்த தாக்குதல் நடவடிக்கை பல மாதங்களாக தயாரிக்கப்பட்டது’ என அது தெரிவித்துள்ளது. அத்துடன், அந்த தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவையும் SBU பகிர்ந்துள்ளது.

ukraine says it hit russias bridge to crimea with underwater explosives
உக்ரைன் நடத்திய உக்கிர தாக்குதல் | ரஷ்யாவுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் சேதம்!

இதன் காரணமாக, ரஷ்யாவின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணி முதல் காலை 7 மணி வரை சுமார் மூன்று மணி நேரம் அதன் செயல்பாடு நிறுத்தப்பட்டதாகக் கூறியது. எனினும், தற்காலிகமாக மூடப்படுவதற்கான காரணத்தை ரஷ்யா தெரிவிக்கவில்லை. ஆனால் பாலம் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இந்த தாக்குதல் தோல்வி அடைந்திருப்பதாகவும், இது உக்ரைனின் ஆளில்லா விமானத்தால் நடத்தப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

ukraine says it hit russias bridge to crimea with underwater explosives
கிரீமியா பாலம்

கெர்ச் ஜலசந்தியின் மீது உள்ள 19 கிமீ (12 மைல்) கிரிமியா பாலம் ரஷ்யாவின் போக்குவரத்து வலையமைப்பிற்கும் கிரிமியன் தீபகற்பத்திற்கும் இடையிலான ஒரே நேரடி இணைப்பாகும். மாஸ்கோ இதை, 2014ஆம் ஆண்டு உக்ரைனுடன் இணைத்தது. இந்தப் பாலம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஒரு முதன்மைத் திட்டமாகும். இது ஒரு தனி சாலை மற்றும் ரயில் பாதையைக் கொண்டுள்ளtது. இரண்டும் கான்கிரீட் ஸ்டில்ட்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இது கருங்கடலுக்கும் சிறிய அசோவ் கடலுக்கும் இடையில் கப்பல்கள் கடந்து செல்லும் இடத்தில் எஃகு வளைவுகளால் பிடிக்கப்பட்ட ஒரு பரந்த இடைவெளிக்கு வழிவகுக்கிறது.

மேலும், இந்தப் பாலம், கடந்த காலங்களில் உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகளுக்கான முக்கியமான பாதையாகும். பிப்ரவரி 2022இல் உக்ரைன் மீதான படையெடுப்பின் போது ரஷ்யப் படைகளால் இந்தப் பாலம் பயன்படுத்தப்பட்டது, அவர்கள் அதைக் கடந்து கிரிமியாவை அடைந்தனர். அங்கிருந்து உக்ரைனின் தெற்கு கெர்சன் மற்றும் தென்கிழக்கு சபோரிஜியா பகுதிகளின் சில பகுதிகளைக் கைப்பற்றினர்.

ukraine says it hit russias bridge to crimea with underwater explosives
ரஷ்யாவுக்கு ஷாக்! மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com