ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல்: இந்தியாவிலும் விரைவில் அனுமதிக்க வாய்ப்பு!

ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல்: இந்தியாவிலும் விரைவில் அனுமதிக்க வாய்ப்பு!
ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல்: இந்தியாவிலும் விரைவில் அனுமதிக்க வாய்ப்பு!

ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ரா ஜெனெகாவின் கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசிக்குப் பிறகு இங்கிலாந்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது தடுப்பூசி இதுவாகும்.

கொரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியும் பணியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்கிவிட்டன. இந்த இரு நாடுகளும் ஃபைசர் நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்து செயல்படுத்தியுள்ளன.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் 'அஸ்ட்ரா ஜெனெகா' நிறுவனம், தங்களது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரி விண்ணப்பித்தன. இப்போது, பிரிட்டன் அரசு இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் தரப்பில் கூறுகையில், '4 மற்றும் 12 வாரங்கள் இடைவெளிக்குள் 2 டோஸ் மருந்துகள் செலுத்த வேண்டும். இந்தத் தடுப்பூசி, கொரோனா அறிகுறைகளை தடுப்பதில் பாதுகாப்பான மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டு 14 நாட்களுக்கு பிறகு யாருக்கும் பாதிப்பில்லை' என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலை மற்றும் 'அஸ்ட்ரா ஜெனெகா' நிறுவனம், மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த, 'சீரம்' நிறுவனத்துடன் இணைந்து 'கோவிஷீல்டு' என்னும் தடுப்பூசியை தயாரித்து வருகிறது.

இந்தியாவிலும் இந்நிறுவனம் ஒப்புதலுக்காக விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலும் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com