பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு
பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.
உலகின் மிக உயரமான போர்க்களம் என வர்ணிக்கப்படும் சியாசென் பனிச்சரிவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்தது. இதில் இர்ஃபான் பெர்சா மற்றும் ராஜா ஜீஷான் ஜஹான்ஜெப் என்ற இரண்டு மேஜர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு மீட்பு படையினர் விரைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதல்களில் முக்கிய இடமாக விளங்கும் சியாசென்னில் பல வீரர்கள் கடுங்குளிராலும், பனிசரிவுகளாலும் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com