வடகொரியாவுடன் அரசியல் ரீதியான தீர்வு காண ட்ரம்ப் விருப்பம்

வடகொரியாவுடன் அரசியல் ரீதியான தீர்வு காண ட்ரம்ப் விருப்பம்

வடகொரியாவுடன் அரசியல் ரீதியான தீர்வு காண ட்ரம்ப் விருப்பம்
Published on

வடகொரியாவுடன் நீடித்து வரும் பிரச்சனைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருவதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. அந்நாட்டுடன் அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தி காலத்தை‌ விரயம் செய்ய வேண்டாம் என அதிபர் ட்ரம்ப், வெளியுறவு ‌அமைச்சர் டில்லர்சனுக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதனால் வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை நிறுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், முதல் குண்டு வீசப்படும் வரை வடகொரியா பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும், அதைத்தான் அதிபர் ட்ரம்பும் விரும்புகிறார் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்ப‌த்தில் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சூழலில் ரெக்ஸ் டில்லர்சன் இவ்வாறு தெரிவித்திருப்பது ப‌ல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com