டோக்கியோவில் ஏழைகளுக்காக ஒரு ரெஸ்டாரண்ட்: பணமில்லாமல் சாப்பிடலாம்
டோக்கியோவில் ஏழைகள் பணமில்லாமல் உணவருந்தும் ரெஸ்டாரண்ட்டிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சாதாரண ஏழை மக்கள் மிகப்பெரிய ரெஸ்டாரண்ட்களில் உணவு சாப்பிடுவது மிகவும் அரிது. ஆனால், டோக்கியாவில் உள்ள ரெஸ்டாரண்ட்டில் ஏழைகள் பணமில்லாமல் உணவு அருந்த ஏற்பாடு செய்துள்ளார்கள். இதனை கேட்பதற்கு சற்று ஆச்சர்யமாகதான் இருக்கும். ஆனால், உண்மைதான். டோக்கியாவின் ஜின்போசோ மாவட்டத்தில் உள்ள மிரவ் சோகுடோ என்ற ரெஸ்டாரண்ட்தான் அது.
இந்த ரெஸ்டிராண்டில் ஏழைகள் உணவு உண்ண விரும்பினால், தங்களுக்கு பிடித்ததை சாப்பிடலாம். ஒரே ஒரு நிபந்தனை மட்டுதான் உள்ளது. அது என்னவென்றால், வெறும் 50 நிமிடங்கள் மட்டும் உணவுப்பொருட்களை சுத்தம் செய்வது, உணவு மேசைகளை தூய்மை செய்வது போன்ற சில வேலைகளை மட்டும் செய்தால் போதும். உண்ணும் உணவுக்கு பதிலாக சில வேலைகள் அவ்வுளவுதான். இதில் இலவசம் என்பது இல்லை.
மிரவ் சோகுடோ ரெஸ்டிராண்டை சிகாய் கோபயஷி என்ற பெண்மணி 2016 ஆம் ஆண்டில் தொடங்கியுள்ளார். , “ஒருநாள் நான் சமைத்த உணவு எனது நண்பர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுதான் என்னை சொந்தமாக ரெஸ்டாரண்ட் தொடங்க ஊக்குவித்தது. மிரவ் சோகுடோ ரெஸ்டிராண்டை திறப்பதற்கு முன்பாக ஒரு மிகப்பெரிய ரெஸ்டிராண்டில் முறையாக பயிற்சி எடுத்துக் கொண்டேன்” என்று கூறுகிறார் சிகாய்.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், சிகாய் மட்டும் தான் தனது ரெஸ்டிராண்டில் நிரந்திர பணியாளராக இருக்கிறார். அப்படியென்றால், எல்லாம் சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள்தான் மற்ற பணியாளர்கள். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், ஒரு ஷிப்டில்(4 மணி நேரம்) மட்டும் 500 பேர் பணியாற்றுகிறார்கள். அதாவது சாப்பிடுகிறார்கள், பணியாற்றுகிறார்கள். இது ஏழைகளுக்கானது மட்டுமல்ல, ஒரு புதுவிதமான ரெஸ்டாரண்ட் என்பதில் சந்தேகம் இல்லை.