அபிநந்தனை விடுவித்ததில் எந்தவிதமான அழுத்தமும் இல்லை: பாகிஸ்தான் விளக்கம்

அபிநந்தனை விடுவித்ததில் எந்தவிதமான அழுத்தமும் இல்லை: பாகிஸ்தான் விளக்கம்
அபிநந்தனை விடுவித்ததில் எந்தவிதமான அழுத்தமும் இல்லை: பாகிஸ்தான் விளக்கம்

அபிநந்தனை விடுவிப்பது தொடர்பாக பாகிஸ்தானுக்கு எந்தவிதமான அழுத்தமும் இல்லை என பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது.

கடந்த ஆண்டு, பிப்ரவரியில் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தின.

அப்போது அபிநந்தன் பயணித்த 'மிக் 21' ரக விமானம், பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் விழுந்தது. அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்தனர். 60 மணி நேரத்துக்குப் பின் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சர்தார் அயாஸ் சாதிக், பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ள இந்திய வீரர் அபிநந்தனை நாம் விடுவிக்காவிட்டால், இந்தியா நிச்சயம் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும். அதுவும் இன்று இரவு 9 மணிக்கே இந்தியா போர் தொடுக்கலாம். எனவே அபிநந்தனை விடுவிப்பதுதான் சிறந்தது என்று வெளியுறவு அமைச்சர் குரேஷி, நடுக்கத்துடன் கூறியதாகவும், இதைக்கேட்ட, ராணுவ தலைமை தளபதி ஜாவேத் பஜ்வாவுக்கு வியர்த்துக் கொட்டியதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரின் இந்தப் பேச்சு அந்நாட்டிலும் இந்தியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அயாஸ் சாதிகின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜாஹித் ஹபீஸ் சவு த்ரி கூறுகையில், அபிநந்தனை விடுவிப்பது தொடர்பாக பாகிஸ்தானுக்கு எந்தவிதமான அழுத்தமும் இல்லை" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "பாகிஸ்தான் அரசு இந்த முடிவை அமைதியின் சைகையாக எடுத்தது. இது சர்வதேச சமூகத்தால் பாராட்டப்பட்டது," என்று அவர் தனது வாராந்திர ஊடக சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com