உலகிலேயே மிகப் பெரிய மாணிக்க கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரத்தினபுரி என்ற இடத்தில் கண்டறியப்பட்ட இந்த மாணிக்க கல் 310 கிலோ எடை கொண்டது. இதற்கு ஆசியாவின் ராணி என்று பெயரிடப்பட்டுள்ளது. துறைசார்ந்த அதிகாரிகள் கல்லின் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அதனடிப்படையில், உலகிலேயே மிகப்பெரிய நீல மாணிக்க கல் என்பது உறுதியாகியுள்ளது. இது மிகவும் அரிய வகை கல் என்பதோடு, உலகில் எந்தவொரு பகுதியிலும் இவ்வாறான மாணிக்கல் கல் கண்டறியப்படவில்லை என ரத்தினவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.