ஆப்கானில் இருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஆப்கானில் இருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஆப்கானில் இருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
Published on
ஆப்கானிஸ்தானில் இருந்து அண்டை நாடுகளுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வந்ததை அடுத்து காபூலில் உள்ள முக்கிய பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்து வருகின்றனர். மஸார் ஐ ஷரீஃப் வரை பேருந்தில் செல்லும் மக்கள் அங்கிருந்து ஈரானுக்குள் தஞ்சம் அடைகின்றனர். ஆப்கானில் எரிபொருள், அரிசி மற்றும் மாவுப் பொருள்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் முன் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். ரொக்கக் கையிருப்பு பற்றாக்குறையால் வர்த்தக நடவடிக்கைள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவதிக்குள்ளாகி வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com