தன் குஞ்சுகளைக் காப்பாற்றிவிட்டு பாம்பிடம் மாட்டிக்கொண்ட தாய் வாத்து: பதற வைக்கும் வீடியோ

தன் குஞ்சுகளைக் காப்பாற்றிவிட்டு பாம்பிடம் மாட்டிக்கொண்ட தாய் வாத்து: பதற வைக்கும் வீடியோ
தன் குஞ்சுகளைக் காப்பாற்றிவிட்டு பாம்பிடம் மாட்டிக்கொண்ட தாய் வாத்து: பதற வைக்கும் வீடியோ

வாத்து ஒன்று தனது குஞ்சுகளை காப்பாற்றிவிட்டு பாம்பிடம் மாட்டிக்கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரி சுதாராமன் ஐ.எஃப்.எஸ் தனது ட்விட்டர் பதிவின் வீடியோவில்,  மலைப்பள்ளத்தில் வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் இருக்கும்போது திடீரென கருமைநிறம் கொண்ட பெரிய மலைப்பாம்பு ஒன்று சரசரவென்று வாத்து இருக்கும் பொந்துக்குள் நுழைகிறது.

உடனே தாய் வாத்து கத்திக்கொண்டே 20 க்கு மேற்பட்ட தனது குஞ்சுகளை வெளியேற்றுகிறது. அதற்குள் பாம்பு முழுமையாக தாய் வாத்தை முழுமையாக உடம்பால் வளைத்து விடுகிறது. குஞ்சுகள் அனைத்தும் வெளியில் பரிதவிப்புடன் பார்க்க, பாம்பிடம் சிக்கிக்கொண்ட தாய் வாத்து செய்வதறியாது சோகத்துடன் திகைக்கிறது. பாம்பு தனது வாயை வாத்தின் முகத்திற்கு அருகே வரும்போது வீடியோ முடிகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து ’இயற்கையின் விதிகளை விட தாய்மையின் வலிமை அதிகம்’ என்று பகிர்ந்திருக்கிறார், சுதா ராமன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com