பள்ளி குழந்தைகளுக்கு ஊசி போட்டு பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியர் கைது

பள்ளி குழந்தைகளுக்கு ஊசி போட்டு பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியர் கைது
பள்ளி குழந்தைகளுக்கு ஊசி போட்டு பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியர் கைது

சீனாவில் மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு ரகசிய ஊசி செலுத்தி, பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக ஆசிரியர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஆர்ஓய்பி மழலையர் பள்ளி குழந்தைகளின் கைகளில் ஊசி குத்திய தழும்புகளை கண்ட பெற்றோர், சந்தேகம் அடைந்து அந்தப் பள்ளியின் மீது காவல்துறையிடம் புகார் அளித்தனர். குழந்தைகளுக்கு ஊசி போட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

சீனா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் அந்தப் பள்ளியின் 22 வயது ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளனர். அவர் குழந்தைகளிடம் அத்துமீறி நடந்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com