புர்ஜ் கலீஃபா கோபுரத்தில் தமிழ்நாடு பற்றிய காட்சிப்படம்

புர்ஜ் கலீஃபா கோபுரத்தில் தமிழ்நாடு பற்றிய காட்சிப்படம்
புர்ஜ் கலீஃபா கோபுரத்தில் தமிழ்நாடு பற்றிய காட்சிப்படம்

துபாயில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரத்தின் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாடு பற்றிய காட்சிப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

சர்வதேச கண்காட்சியில் அமைந்துள்ள இந்திய அரங்கில் தமிழ்நாடு வார விழா கடைபிடிக்கப்படுவதையொட்டி, துபாயில் உள்ள இரண்டாயிரத்து 217 அடி உயரம் கொண்ட உலகின் அதிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரம் மீது தமிழ்நாடு குறித்த காட்சிப்படம் ஒளிபரப்பப்பட்டது. தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அந்த அழகிய காட்சிப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். துபாய் பயணத்தின் 2ஆவது நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகள் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com