பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் உயிரிழப்பு 

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் உயிரிழப்பு 
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் உயிரிழப்பு 

பிலிப்பைன்ஸ் வடக்கு கோடபடோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு கோடபடோ பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் குழந்தைக‌ள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். தென்மேற்கிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் கடலுக்கடியில் 2 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 அளவில் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் பெரும்பாலான கட்டடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். துலுனன் மற்றும் மேக்சய்சய் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com