இலங்கை டூ ஆஸ்திரேலியா: சட்ட விரோதமாக படகில் செல்ல முயன்ற 67 பேர் கைது

இலங்கை டூ ஆஸ்திரேலியா: சட்ட விரோதமாக படகில் செல்ல முயன்ற 67 பேர் கைது
இலங்கை டூ ஆஸ்திரேலியா: சட்ட விரோதமாக படகில் செல்ல முயன்ற 67 பேர் கைது

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 67 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் அண்டை நாடுகளான இந்தியா ஆஸ்திரேலியாவுக்கும் இடம் பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை கடற்படை கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக பயணம் செய்து அந்நிய நாடுகளில் குடியேற முயற்சி செய்பவர்களை தடுக்கும் நோக்கத்தோடும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

இதையடுத்து நேற்று இலங்கை கல்முனை கடல் பகுதியில் இலங்கை கடற்படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒரு விசைப்படகு சென்று கொண்டிருந்தது. அதை இடைமறித்த இலங்கை கடற்படையினர் நடத்திய சோதனையில் 67 பேர் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து 67 நபர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களை மேல் நடவடிக்கைக்காக திருகோணமலை துறைமுக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com