இலங்கையில் நாடாளுமன்ற முடக்கத்தை நீக்கி அதிபர் உத்தரவு

இலங்கையில் நாடாளுமன்ற முடக்கத்தை நீக்கி அதிபர் உத்தரவு
இலங்கையில் நாடாளுமன்ற முடக்கத்தை நீக்கி அதிபர் உத்தரவு

இலங்கை நாடாளுமன்ற முடக்கத்தை நீக்கி அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். வரும் திங்களன்று, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி அதிபர் மைத்ரிபால சிறிசேன அண்மையில் உத்தரவிட்டிருந்தார். புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்து அவருக்கு பதவிபிரமாணமும் செய்துவைத்தார். ஆனால், தன்னை யாரும் பதவியில் இருந்து நீக்க முடியாது, தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார். 

இதையடுத்து இலங்கையின் அரசியல் குழப்பம் உச்சமடைந்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தை வரும் 16 ஆம் தேதி வரை முடக்கி வைத்து அதிபர் சிறிசேன உத்தரவிட்டிருந்தார். 

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில் ரணில் விக்ரமசிங்கே கட்சியின் உறுப்பினர்கள் சிலர், மகிந்த ராஜபக்ச கட்சிக்கு தாவினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற முடக்கத்தை நீக்கி அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார். 

அதிபருடன் சபாநாயகர் கரு ஜெயசூர்யா நேற்று ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து நாடாளுமன்ற முடக்கத்தை நீக்கி சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தற்போதைய அரசியல் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், திங்களன்று நாடாளுமன்ற உறுப்பினர் கள் கூட்டத்திற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com