இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்

இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்
இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்

இலங்கையில் அனைத்துக்கத்தோலிக்கத் தேவாலயங்களும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் அன்று தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 360 பேர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த ஐநூறுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச் சைப் பெற்று வருகின்றனர். இந்தக் கொடூர தற்கொலைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 10 பேர் உட்பட வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதில் 9 பேர் மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டனர். 

இந்த சதியில் தொடர்புடைய பலரை கைது செய்து இலங்கை பாதுகாப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலையும் கொழும்பு புறநகர் பகுதியான புகாடோவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பாதுகாப்பு காரணங்களுக்காக, இலங்கையில் உள்ள அனைத்துக் கத்தோலிக்கத் தேவாலயங்களும் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’’பாதுகாப்பு நடவடிக்கைக்காகத் தேவலாயங்களை மூட, பாதுகாப்புப் படை தெரிவித்த ஆலோசனையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த அறிவிப்பு வரும்வரை தேவாலயங்களில் பொது பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறாது’’ என்று, தேவாலயத்தின் மூத்த பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com