இலங்கையில் முப்படை தளபதிகள் மாற்றம் ? - அதிபர் சிறிசேன அறிவிப்பு

இலங்கையில் முப்படை தளபதிகள் மாற்றம் ? - அதிபர் சிறிசேன அறிவிப்பு
இலங்கையில் முப்படை தளபதிகள் மாற்றம் ? - அதிபர் சிறிசேன அறிவிப்பு

இலங்கையில் முப்படை தளபதிகளை மாற்றம் செய்யவுள்ளதாக அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறிசேன மக்களுடன் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உளவுத்துறை எச்சரித்திருந்தும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தாக்குதல் சம்பவம் குறித்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன மக்களிடம் இன்று பேசினார். அப்போது, தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை தனக்கு அளிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். வரும் வாரங்களில் காவல்துறை, பாதுகாப்பு படை முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 24 மணி நேரத்தில் முப்படை தளபதிகளையும் மாற்ற உள்ளதாக சிறிசேன நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டன் தினத்தன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் சர்ச் உட்பட பல இடங்களில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் உலக அளவில் அதிர வைத்துள்ளது. மேலும் உலகத் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூஸிலாந்து மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com