‌தனிநாடு கோரி ஸ்பெயினில் போராட்டம்

‌தனிநாடு கோரி ஸ்பெயினில் போராட்டம்

‌தனிநாடு கோரி ஸ்பெயினில் போராட்டம்
Published on

ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவை தனியாக பிரிப்பதற்கான வாக்கெடுப்புக்கு தடை விதிக்கக் கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாட்ரிட் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்பெயினிலிருந்து கே‌ட்டலோனியாவை பிரிப்பதற்கு வரும் அக்டோபர் 1 ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகளை காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர்.

இந்நிலையில் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், கேட்டலோனியாவுக்காக வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் ஏராளமானோர் மாட்ரிட் நகரின் மையப் பகுதியில் உள்ள‌ சோல் சதுக்கத்தில் போராட்டம் நடத்தினர். அவர்களது இந்தப் போராட்டத்தை கண்டித்தும், ஒருங்கிணைந்த ஸ்பெயினை வலியுறுத்தியும் மற்றொரு தரப்பினர் களம் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பெரும் பத‌ற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட முயன்ற சிலரை அங்கிருந்து வி‌‌ரட்டி அடித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com