அமெரிக்காவில் முத்தமிட்டவரை நாக்கில் தீண்டிய பாம்பு
அமெரிக்காவின் புளோரிடாவில் பாம்பை முத்தமிட்ட ஒருவரை நாக்கில் தீண்டியதால் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.
பொதுவாக அமெரிக்கர்கள் சாகச விரும்பிகள். மலைமேல் ஏறுவது, கடலில் சாகசம் செய்வது என ஏதாவது செய்து கொண்டுதான் இருப்பார்கள். அப்படி சாகசம் செய்வதாக நினைத்து தன் உயிருக்கே ஆபத்தை தேடிக் கொண்டார் அமெரிக்கர் ஒருவர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள புட்னாம் பகுதியை சேர்ந்தவர் ரான் ரினால்டு. இவரது பக்கத்து வீட்டில் சார்லஸ் கோப் என்பவர் தங்கியுள்ளார்.
சார்லஸ் வீட்டின் அருகே ரேட்டில் சினேக் என்ற பாம்பு சுருண்டு படுத்து கிடந்தது. அது குறித்து ரான் ரினால் டிடம் சார்லஸ் கோப் கூறினார். மது மயக்கத்தில் இருந்த ரான் ரினால்டு அங்கு சென்று பாம்பை பார்த்தார். பின்னர் கையில் எடுத்து கொஞ்சினார். ஒரு கால கட்டத்தில் அந்த பாம்பை முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதுவரை அமைதியாக இருந்த பாம்பு திடீரென ஆவேசமடைந்தது. முத்தமிட்ட அவரின் நாக்கில் கொத்தி விட்டு கையில் இருந்து நழுவி கீழே விழுந்து ஓடி விட்டது.
பாம்பு கொத்தியதால் வேதனையில் துடித்த ரான் ரினால்டை புளேரிடாவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரானின் விளையாட்டு அவருக்கே வினையானது.

