தென் கொரிய சுரங்கப் பாதையில் தீ விபத்து - 6 பேர் பலி

தென் கொரிய சுரங்கப் பாதையில் தீ விபத்து - 6 பேர் பலி
தென் கொரிய சுரங்கப் பாதையில் தீ விபத்து - 6 பேர் பலி

தென் கொரியா நாட்டின் சியோலின் புறநகரில் உள்ள விரைவுச் சுரங்கப்பாதையில் பேருந்து மற்றும் டிரக் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் சியோலில் உள்ள எக்ஸ்பிரஸ்வே சுரங்கப்பாதையில், பேருந்து ஒன்று டிரக்குடன் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சுரங்கப் பாதை என்பதால் தீ வேகமாக பரவியதாகவும், புகையை சுவாசித்த 20 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த விபத்தில் தற்போது வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தையடுத்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டு அரசு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் இறுதியில், சியோலின் இட்டாவோன் மாவட்டத்தில் ஹாலோவீன் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மீண்டும் இந்தத் தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com