கேமராவை மறைத்து வைத்து நூறு பெண்களை ஆபாசமாகப் படம்பிடித்தவர் கைது  

கேமராவை மறைத்து வைத்து நூறு பெண்களை ஆபாசமாகப் படம்பிடித்தவர் கைது  
கேமராவை மறைத்து வைத்து நூறு பெண்களை ஆபாசமாகப் படம்பிடித்தவர் கைது   

சிங்கப்பூரைச் சேர்ந்த 35 வயது நபர் 100க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாகப் படம்பிடித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

100க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாகப் படம்பிடித்த குற்றவாளியைச் சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சிங்கப்பூரைச் சேர்ந்த 35 வயது நபர் 100க்கும் மேற்பட்ட பெண்களை அவதூறாகப் படம்பிடித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 27 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் இருந்து 1400க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பெண்கள், சிறுமிகள் எனப் பலரும் அவரது வீடியோவில் சிக்கியுள்ளனர். பேருந்து, ரயில்கள் போன்ற இடங்களில் குட்டைப் பாவாடை அணிந்து வரும் பெண்களைக் குறி வைத்து இவர் வீடியோ எடுத்துள்ளார். கழிவறை, குளியலறை, உடை மாற்றும் அறை எனப் பல இடங்களிலும் ரகசிய கேமராக்கள் பொருத்தி அந்த நபர் வீடியோக்களை ரகசியமாக எடுத்துள்ளார்.

மேலும் ரகசிய பேனா கேமராவையும் இவர் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. உடன் வேலை பார்த்த பெண் ஊழியரை ரகசியமாகப் படம் பிடித்த போதே 2016ம் ஆண்டு அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குச் சிங்கப்பூரில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. 2முதல் 5 வருடங்கள் வரை
சிறைத்தண்டனை கொடுக்கும் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com